சென்னை:

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்தார்.

வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏ.வுமான காடுவெட்டி ஜெ.குரு குரல்வளை பாதிப்பால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல நாட்களாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தொடர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சற்று முன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தகவலறிந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.