தமிழ் திரையுலகில் தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகைகளில் வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒருவர்.
தற்போது டேனி என்ற படம் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். டேனி திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி நேரடியாக Zee5 தளத்தில் வெளியாகவுள்ளது.
லாக்டவுன் காரணமாக கிடைத்துள்ள இந்த நேரத்தை வரலட்சுமி தனது வீட்டிலேயே செலவழித்து வருகிறார்.
சினிமா சார்ந்த பணிகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பேக்கரி கம்பெனியை துவங்கியுள்ளார். லைஃப் ஆஃப் பை என பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே வரலட்சுமி விற்பனையை துவங்கிவிட்டார்.
https://twitter.com/varusarath/status/1278274738725351425
இதுகுறித்து அவரது பதிவில், சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு சிறிய பேக்கிங் கம்பெனியை துவங்கினேன். லைப் ஆப் பை மூலமாக பிரஷ்ஷாக பேக் செய்யப்பட்ட சீஸ் டாட்ட்ஸ்களை செய்து கொடுக்கிறேன். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய பிசினஸாக வளர்ந்து இருக்கிறது. தற்போது வரை நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஆர்டர்களை முடித்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆர்டர் கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.