கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே ராம்கோபால் வர்மா,  படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது கிளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.  இந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வை களை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.
கிளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது  ’நேக்டு நங்கா நக்னம்’ படத்தை இதே தளத்தில் நாளை  ஜூன் 27 அன்று வெளியிட வுள்ளார்.
‘ இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக் கிடைக்கும். ஏற்கனவே வர்மாவின் கிளைமாக்ஸ் திரைப்படம் வெளியாகி வர்வேற்பை  பெற்றுள்ளது. சினிமா உலகில் ஆன்லைன் தியேட்டர் என்ற விஷயத்தை அறிமுகப்படுத் தியுள்ள ஷ்ரேயாஸ் ஈடியின் புதிய வெர்ஷன் ஏராளமான வெற்றிப்படங்களை வரும் 2021 மார்ச் இறுதிக்குள் வெளியிட திட்டமிட் டுள்ளது.
மேலும் 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களின் நேரடி வெளியீட்டயும்  நயன்தாரா நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் ஈடியின் மூலம் வெளியாகவுள்ளது. ’