சென்னை:

ன்னியாகுமரி தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன் ராதா கிருஷ்ணனை  தோற்கடித்து அமோகமாக  வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சபாநாயகர் தனபாலை சந்தித்து, தனது  நாங்குநேரி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.

இதையடுத்து நாங்குநேரிதொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படும். அடுத்த 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிட திமுக முயற்சி செய்து வரும் நிலையில், வசந்தகுமார் தனது மகனை நாங்குனேரி தொகுதியில் களமிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.