சாம்ராஜ்நகர்

ன்னட சலுவாலி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தோல்வி அடைந்துள்ளார்.

கன்னட மொழியினருக்கு ஆதரவான நிலை கொண்ட கட்சி கன்னட சலுவாலி.   இதன் தலைவர் வாட்டாள் நாகராஜ் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் எதிரான கருத்துக்களை பேசி வருபவர் ஆவார்.   இவர் தற்போதைய கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சாம்ராஜ்நகர் தொகுதியில் தமது கட்சி சார்பாக போட்டியிட்டார்

இன்று தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.    ஆரம்பம் முதல் பின் தங்கியே இருந்த வாட்டாள் நாகராஜ் வெறி, 5648 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.