நெட்டிசன்:

Gowtham Palanivel முகநூல் பதிவு

டில்லி பல்கலைக்கழகத்தில் இன்னும் இருக்கிறது ” தமிழ் மாணவர் சங்கம்” 90களின் மத்தியில் ஒடிசா மாணவர் ஒருவர், தமிழக மாணவர் குணா, லெனின், வெங்கடேசன் ஆகிய நால்வரும் ஒர் அறையில் தங்கி இருந்தனர்.

அப்போது ஒடிசா மாணவருக்கும் தமிழக மாணவருக்கும் பிரச்சினை வர அடுத்த நாள் ஒடிசா மாணவர்கள் பல்கலைக்கழத்தில் ஒன்றுே சேர , நம் மாணவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அங்குள்ள தமிழக மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவானது தான் இந்த அமைப்பு. இதற்கு வித்திட்ட மாணவர்கள் அஸ்கர் அலி படேல் , பன்னீர்செல்வம் , குணசேகரன் , லெனீன் ஆவார்.

அன்றைய மத்திய அமைச்சர்  சேலம், வாழப்பாடி_ராமமூர்த்தி ஐயா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.10,000 நன்கொடை தந்து இந்த அமைப்பை தொடங்கி வைத்தார்.

இந்த தகவலை நாளை தலைமுறை அறிந்து கொள்ளவே இந்த பதிவு.தமிழக மாணவர்கள் அனைவரும் நினைவு கூற வேண்டிய ஓர் தலைவர் “வாழப்பாடி ராமமூர்த்தி” ஐயா. இவரைபோற்றுவோம்.

#மழநாட்டு_மைந்தர்கள்