ஸ்ரீஹரிகோட்டா:

ந்திரயான்3 திட்ட இயக்குனராக வீர முத்துவேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

நிலவை ஆராய வேண்டி சந்திரயான் 3 செயற்கைகோளை அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ தீர்மானித்து உள்ளது. இதற்கிடையில், சந்திரயான்2-ன் விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளாதால், அந்த தவறுகளை  சரிசெய்து, மீண்டும் சந்திரயான்3 திட்டத்தை செயல்படுத்த  இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக வீர முத்துவேலை இஸ்ரோ அறிவித்துள்ளது.  ஏ

ற்கனவே சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் போன்ற இயந்திரங்களை உருவாக்கிய வனிதா தலைமையிலான குழுவுக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.