சென்னை:

மிழகத்தில் நாளை மறுதினம் முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பபட்ட வழக்கிலும், ஐகோர்ட்டு, வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், வாகன ஓட்டிகள் அனைவரும்  செப்.1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும், ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  சென்னை பெருநகர் காவல்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் உரிமம் இல்லாமல்  எந்தவொரு நபரும் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது என்பது கட்டாயம்.

எனவே அச்சட்டத்தின்படி, பொது இடத்தில் சீருடையில் உள்ள காவல் துறை அதிகாரி, வாகன ஓடடுநரிடம் , ஓட்டுநர் உரிமத்தை கேட்டால் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181- இன்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கலாம்.

சாலை பாதுகாப்புக்காக உச்ச நீதிமன்றக் குழு விபத்துக்களை குறைக்கும் வகையில், போக்கு வரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக  நிறுத்தி வைக்கவும் ரத்து செய்யவும் அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

எனவே செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகனம் ஓட்டும் போது அனைவரும்  அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வண்டும். அவ்வாறு அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் .

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.