சென்னை:

மிழகத்தில் கடுமையான தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ள நிலையில், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

சென்னை  நங்கநல்லூர் மற்றும் பழவந்தாங்கலில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்து வருவ தாக இளையராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பல தனியார் இடங்களில் அரசின்  அனுமதியின்றி பல நிறுவனங்கள் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும், இதன் காரணமாக  தண்ணீ்ர் பஞ்சம் அதிகமாகி வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று  கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணி பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, அரசின் அனுமதியின்றி நிலத்தடி நீரை திருடும்  வாகனங்களை பறிமுதல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும்,இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி குடிநீர் வாரியம் ஆகியோர் நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.