தெலுங்கு சினிமாவின் பிரபல கதாசிரியரர் சி.எஸ்.ராவ் என்கிற சிந்தபென்டா சத்யநாராயண ராவ் என்பவர் ஐதராபாத்தில் காலமானார். இவருக்கு வயது 85.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை முதன்முதலாக ‘பிரணம் கரீடு’ என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் .இவர் தான் அந்த படத்திற்கு கதை எழுதியவர்.

கமல்ஹாசன் தெலுங்கில் நடித்த சொம்மோகடிடி சோக்கோகடிடி’ என்கிற படத்தில் முதன்முதலாக நடிகராகவும் மாறினார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்தப்படம் பின்னாளில் தமிழில் இரு நிலவுகள் என்கிற பெயரில் வெளியானது.

சி.எஸ்.ராவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூகவலைதளம் வாயிலாக தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.