ண்டிகர்

ண்டிகரைச் சேர்ந்த ஒரு பெண் காவலர் தனது கைக்குழந்தையுடன் பணியில் ஈடுபடும் வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகிறது.

சண்டிகர் நகரில் பணி புரியும் பெண் காவலர்களில் பிரியங்கா என்பவரும் ஒருவர் ஆவார்.  இவர் போக்குவரத்து காவல்பிரிவில் பணி புரிந்து வருகிறார்.   இவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது.   இவரது மேல் அதிகாரிகள் காலை 8 மணி முதல் சாலையில் போக்குவரத்து ஒழுங்குப் பணி புரியுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் இவர் கைக்குழந்தையைக் கவனிக்க வேண்டி உள்ளதால் பணிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.  இதையொட்டி அவரை அவசியம் பணிக்கு வருமாறு வலியுறுத்தியதாகவும் இதனால் அவருக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

எனவே பிரியங்கா தனது கைக்குழந்தையை எடுத்துச் சென்று குழந்தையுடன் பணியில் ஈடுபட்டுள்ளார்.,  இந்த நிகழ்வு வீடியோ படமாக ஒருவரால் பிடிக்கப்பட்டுள்ளது.   இந்த வீடியோ கடந்த வெள்ளிக்கிழமை சண்டிகர் நகர செக்டர் 15/23 பகுதியில் காலை 11 மணிக்கு  எடுக்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் வெளியானது.

இந்த வீடியோவை பலரும் மறுபதிவு செய்து வைரலாகி உள்ளது.   இந்த வீடுயோவை கண்ட ஒரு சில நெட்டிசனகள் அந்த பெண்ணின் கடமை உணர்வைப் பாராட்டி உள்ளனர்.  அதே வேளையில் பலர் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஒரு பெண் காவலரைப் பணி புரிய வைத்த மூத்த அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.