மும்பை,

காராஷ்டிர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து அநாகரி செயலில் ஈடுபட்ட  பாரதியஜனதா தலைவர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில், பிஜேபி தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த இளம்பெண்ணை வலுக்கட்டாய மாக இழுத்து அவருக்கு முத்தம் கொடுத்து அநாகரிக செயலில் ஈடுபட்டது ரவிந்திர பவந்தாலே என்பவர் தெரிய வந்துள்ளது. இவர் பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள சந்தரபூர் பகுதியில்  பஸ் சென்றுகொண்டிருந்தபோது இந்த பாலியல் அத்துமீறல் நடைபெற்றுள்ளது. அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அவருக்கு பவந்தாலே முத்தம் கொடுத்துள்ளது காமிராவில் பதிவாகி உள்ளது.

இந்த அநாகரிக செயலில் பவந்தாலே ஈடுபட்டபோது, அதை பஸ்சினுள் இருந்த சக பயணிகள் பார்த்துக்கொண்டிருந்ததும், அந்த பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவின் பதிவில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து  அந்தஇளம் பெண்  காவல் நிலையத்தில் புகார் கூறியதை தொடர்ந்து, பவந்தாலே மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக நிர்வாகியின் அந்த அநாகரிக செயல் குறித்த வீடியோ பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து,  அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொள்வதாகவும், அவருக்கு வேலை வாங்கி கொடுப்பதாகவும் பவந்தாலே உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.