தேக்கம்பட்டி:
யானையை அடித்து துன்புறுத்திய இரண்டு யானை பாகன்கள் தற்காலிக பணியிடைநீஏக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் கடந்த 7ஆம் தேதி அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் தொடங்கியது. இதையடுத்து கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் யானை ஒன்றை அதனுடைய பாகங்கள் இரண்டு பேர் சேர்ந்து கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் அந்த வீடியோவில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா என்பது கண்டறியப்பட்டுள்ளது.


இந்த வீடியோவில் ஜெயமால்யாதவை அடித்து துன்புறுத்துவது யானை பாகன்களானால் வினில்குமார் அவருடைய உதவியாளர் என்று கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறநிலை துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையில் அந்த இரண்டு பாகங்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர் விசாரணை நடந்து வரும் சூழலில் உயர்மட்ட அதிகாரிகள் தேக்கம்பட்டி சென்று யானைக்கு ஏற்பட்ட காயங்கள் என அனைத்து தரவுகளையும் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.