திருப்பதி

திருப்பதி ரெயில்வே காவல்துறையினர் பிடியில் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், அணு உலைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திய சமூக ஆர்வலர் முகிலன் கடந்த சில மாதங்களாக காணாமல் போய் இருந்தார்

.

அவர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் ஏறச் சென்றவர் அதன் பிறகு எங்கு சென்றார் என்பது தெரியாமல் மாயமானார்.

[youtube https://www.youtube.com/watch?v=4eoXifNYNvg]

இந்நிலையில் அவர் திருப்பதி ரெயில்வே காவல்துறையின் இடியில் தாடியுடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=1WHO4Ij_t1o]

அத்துடன் அவர் கூடங்குளத்தில் அணு கழிவு முகாம் அமைப்பதை எதிர்த்து கோஷமிட்டபடி செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஆந்திர காவல்துறையினர் முகிலனை காட்பாடி வரை அழைத்து வந்து தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.