ஹனோய்: வியட்நாம் நாட்டில் பெய்த கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

வியட்நாமில் சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து உள்ளது. பலரை காணவில்லை. தொடர் மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வீடுகள் மழை, வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 870 ஹெக்டேர் நெல் வயல்களும், 5,300 ஹெக்டேருக்கு மேற்பட்ட பிற விளை நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
ஏராளமான கால்நடைகள், விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.