நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வந்தன.

வைரலாக பரவிய இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதற்கு தங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்தார்.

பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து டிக் டாக்கில் ஃபில்டரைப் பயன்படுத்தி குழந்தைகள் போன்று முகத்தை மாற்றி அமைத்து குதூகலமாக விளையாடும் வீடியோவை வெளியிட்டனர் .

இந்நிலையில் தற்போது நயன்தாராவின் நெற்றியில் முத்தமிட்டபோது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBup03dBxu3/

யோவ், உங்களுக்கு ஆள் இருக்கு என்பதற்காக இப்படி எல்லாம் புகைப்படம் வெளியிடக் கூடாது. எங்களை போன்ற மொரட்டு சிங்கிள்ஸ் எல்லாம் பாவம் இல்லையா?. லாக்டவுனில் கூட எங்களை கடுப்பேற்றி பார்ப்பதில் உங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்ல விக்கி. நல்லா இருய்யா, நல்லா இரு. எங்களுக்கும் காலம் வரும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் .