கமல்ஹாசன் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் ‘தலைவன் இருக்கின்றான்’. 1992ல் வெளிவந்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான் அது என கூறப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலுடன் கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி இன்ஸ்டாகிராமில் உரையாடியதை அடுத்து அவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டது.
இந்நிலையில் அது என்ன கதாபாத்திரம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தேவர் மகன் பட கதைப்படி நாசர் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில், அவரது மகனாக நடிக்கும் விஜய் சேதுபதி, கமலை பழிவாங்க துடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.