சை அமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி லாக் டவுனுக்கு பிறகு படப் பிடிப்பில் இணைந்தார். விதார்த் நடித்த ’ஆள்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கிறார்.
விஜய் ஆண்டனியின் இப்படம் புதிய படம் அரசியல் த்ரில்லராக உருவா கிறது. ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘மீசைய முருக்கு’ படத்தில் நடித்த ஆத்மிகா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கி றார்.


கொரோனா லாக் டவுன் தளர்த்தப்பட்டு 5 மாதத்துக்கு பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதை யடுத்து விஜய் ஆண்டனி படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தால் இன்னும் பெயரிடப் படாத திரைப் படம் நிவாஸ் கே பிரசன்னாவின் இசை அமைக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் அதிகபட்சம் 75 பேருடன் திரைப்பட படப்பிடிப்புக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. அதன் படி வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.