மான்செஸ்டர்

சாதாரண பயணிகளில் ரெயிலில் விஜய் மல்லையா  பயணம் செய்யும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

உலக கோடிஸ்வர்களில் ஒருவராக இந்தியாவை சேர்ந்த விஜய் மல்லையா விளங்கினார்.   சொந்தமாக விமான நிறுவனம்,  உல்லாசப் படகு என பல வசதிகளுடன் வாழ்ந்து வந்தார்.  பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி திருப்பித் தராததால் அவருடைய விமான நிறுவனம் திவாலானது.   வங்கி நடவடிக்கைகளுக்கு பயந்து அவர் நாட்டை விட்டு வெளியேறி லண்டன் நகரில் தஞ்சம் புகுந்தார்.

அவரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர கடும் முயற்சிகளில் ஈடுபட்டும் வரும் வேளையில் அவருடைய உல்லாசப் படகு மால்டா தீவில் அந்நாட்டு அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.     ஊழியர்களுக்கு ஊதிய பாக்கியை முன்னிட்டு அவர்கள் தொடுத்த வழக்கை ஒட்டி மால்டா தீவில் அவருடைய உல்லாசப் படகு சிறை பிட்க்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் ஒரு பயணிகள் ரெயிலில் மான்செஸ்டர் போகும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.   அந்த புகைப்படத்தில் “மான்செச்டர் செல்லும் ரெயிலில் விஜய் மல்லையா.   எவ்வளவு உயரத்தில் இருப்பவர் இவ்வளவு வீழ்ச்சி அடைந்துள்ளார்.” என தலைப்பிடப்பட்டுள்ளது.