லண்டன்:

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு ஓட்டம் பிடித்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தனது 62வது பிறந்தநாளை நேற்று லண்டனில் கொண்டாடினார்.

 

அவரது மகன் சித்தார்த் மல்லையா தனது தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் மல்லையாவுக்கு சித்தார்த் கேட் ஊட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

விஜய் மல்லையாவின் சொத்துக்களை பிரிட்டன் நீதிமன்றம முடக்கியுள்ள நிலையில் மல்லையாவின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடியை நிலுவை வைத்துவிட்டு தந்தையும், மகனும் கடந்த சில காலமாக லண்டனில் வசித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் மூலம் இந்திய விசாரணை முகமைகள் முயற்சி செய்தும் தோல்வி ஏற்பட்டு வருகிறது.

அவரது சொத்துக்களை நீதிமன்றம் முடக்கியுள்ளது. இதனால் அவரது செலவுக்கு வாரம் 5 ஆயிரம் பிரிட்டன் பவுண்ட்களை வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை 20 ஆயிரம் பவுண்டாக உயர்த்த வேண்டும் என்று மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார்.