சென்னை

டிகர் விஜய் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வருகிறார்.

நடிகர் விஜய் நடிக்கும் “மெர்சல்” திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.   அதற்கான டிக்கட் முன்பதிவும் தொடங்கி உள்ளது.  ஆனால் அந்தப் படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு விஜய் சென்றுள்ளார்.  தற்போது இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.   இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் உடன் இருக்கிறார்.   இந்த சந்திப்பு எதைப்பற்றி நடைபெருகிறது என்பது குறித்து இதுவரை அரசின் தரப்பில் இருந்தோ விஜய் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் தரப்படவில்லை.