‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் படக்குழுவைச் சேர்ந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாக நேற்று முன்தினம் விஜய் ராஸ் கைது செய்யப்பட்டார்.

இது சமூக வலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது விசாரணை அதிகாரியின் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.