ரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குன ராக அறிமுக மானவர் ஆறுமுக குமார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடித்ததிருந்தனர். அடுத்த ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படத்தையும் தயாரித்து வருகிறார்.

மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத் தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட உள்ளடக்கம் மற்றும் இந்திய வணிகப் பிரிவின் நிர்வாகக் குழு உறுப்பினராக தற்போது இவர் நியமிக்கப்பட்டி ருக்கிறார். இந்த தகவை மிகுந்த உற்சாகத் துடன் பகிர்ந்து கொண்ட இயக்குநர் ஆறுமுககுமார். அவர் குறும்போது, “மலேஷியாவின் தேசிய திரைப் பட வளர்ச்சிக் கழகம் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) எனக்கு அளித்த இந்த கெளரவம் நான் சற்றும் எதிர்பாராதது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஓர் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ்ப்பட உலகம் எனக்கு பயனுள்ள பல அரிதான அனுப வங்களைக் கொடுத்திருக்கிறது. தமிழ்த் திரைப்பட உள்ளடக்கம் மற்றும் வணிகப் பிரிவின் Tamil Film Content & India Market by National Film Development Corporation Malaysia (FINAS) நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட் டதை எனக்குக் கிடைத்த பெரிய வரமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பின் மூலம் நமது வணிக எல்லைகளை மேலும் உயர்த்தவும், இந்திய மலேஷிய பொழுது போக்கு வணிக மதிப்புகளை உயர்த்தவும் பால மாக இருப்பேன் எனத் தெரிவித்தார் ஆறுமுக குமார் .