சென்னை: விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ள ‘800’ படம் விவகாரம் தொடர்பாக, இலங்கை கிரிக்கெட்வீரர்  முத்தையாமுரளிதரன் நீண்ட விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு ‘800’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த, அதுவும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சன்டிவி நிர்வாகத்தின், சன் ரைசர்ஸ் அணியின் கோச்சாக இலங்கை பந்துவீச்சாளர் முத்தையாமுரளிதரன் நியமிக்கப்பட்டு, விளையாடி வரும், விஜய்சேதுபதி நடிப்பதற்கு மட்டும் என எதிர்ப்பு என்றும் கேள்வி எபப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முத்தையா முரளிதரன் நீண்ட விளக்கம் தெரிவித்து உள்ளார்.