புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கும், டாப்சிக்கும் – ’டபுள் ரோல்’’
விஜய் சேதுபதி- டாப்சி ஜோடியாக நடிக்கும் புதிய படம் மூலம் பிரபல டைரக்டர் ஆர். சுந்தரராஜன் மகன் தீபக் சுந்தரராஜன், இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனைகளில் நடைபெற்று வருகிறது. சரித்திர காலத்தைக் கண் முன் நிறுத்தும் வகையில் அரங்கம் அமைத்து ஷுட்டிங் நடக்கிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதியும், டாப்சியும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இருவருமே இதற்கு முன்னர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி ‘சங்கத்தமிழன்’ படத்திலும், டாப்சி ‘விரைவில் வெளிவர உள்ள ‘’ சியா.. ஜியா’’ என்ற இந்தி படத்திலும் ’’டபுள் ரோல்’’ செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பா.பாரதி.