‘கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி.

இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.

கிடா மீசையில் பல படங்களில் அனைவரையும் மிரட்டி வந்த தவசி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறியுள்ளார். சிகிச்சைக்காக உதவி நாடியுள்ளார் நடிகர் தவசி.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசிக்கு நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.

நடிகர் சூரி 20 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்.

மேலும் நடிகர் தவசியை தனது மருத்துவமனையில் தங்க வைத்து இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார் திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-வான சரவணன்.