தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்திலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ள புதிய இந்திப் படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கவுள்ளார். ‘காந்தி டாக்ஸ்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படம் மவுனப் படமாகும். சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் திரையுலகில் தயாராகும் மவுனத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

1987-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே இந்தியில் கடைசியாக உருவான மவுனப் படமாகும்.

‘காந்தி டாக்ஸ்’ படத்தை மூவி மில் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தவிர்த்து இந்தியில் ‘மாநகரம்’ இந்தி ரீமேக்கான ‘மும்பைகர்’, ‘அந்தாதூன்’ இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கவுள்ள அடுத்த படம் மற்றும் ஷாகித் கபூர் நடிக்கவுள்ள வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.