டிகர் விஜய் சேதுபதி, பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோர் மதுரையில் தங்களது கண்களை தானம் செய்தனர்.

மதுரை கே.கே. நகரில் நடைபெற்ற அகர்வால் கண் மருத்துவமனை 2வது கிளை திறப்பு விழாவில் அவர்கள் தங்களது கண்கள் தானம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகள் குழும சிஇஓ டாக்டர் அடில் அகர்வால் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் எஸ் பெர்னார்ட் ஆல்பர்ட் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியும், திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்தும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் கண் தான விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்குத் தங்கள் முழு ஆதரவை அளிப்பதாக உறுதி அளித்தனர்.

மருத்துவமனையைத் திறந்து வைத்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில் ‘மதுரையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் இரண்டாவது கண் மருத்துவமனையைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன், எனது ரசிகர்களின் தேவையைப் பொருத்து இலவச அறுவை சிகிச்சைகளை வழங்க ஒப்புக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கண் தானம் என்பது புனிதமான பணியாகும். யாரோ ஒருவரின் வாழ்க்கையில் ஒளியேற்றத் தங்கள் கண்களை தானம் செய்ய இன்னும் அதிக எண்ணிக்கையில் மக்கள் முன் வர வேண்டும். இங்கு அனுபவமும், மதுரை நகரின் மதிப்பை இன்னும் உயர்த்தும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமானோருக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன.