பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 2 ஜெய்ப்பூரில் தொடங்கியது. இதில் பிரதான கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்து வருகிறார்.

முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் யோகி பாபு.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி – டாப்ஸி இருவருமே இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ஒன்று தற்காலக் கதாபாத்திரமாகவும், இன்னொன்று சரித்திரக் கதாபாத்திரமாகவும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் பெயர் என்னவென்பது தெரியவந்துள்ளது. இந்த படத்துக்கு அனபெல் சுப்ரமண்யம் (Annabelle Subramaniam) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய தகவல்களின்படி, டாப்ஸி அனபெல் என்ற அதிநவீன நகரப் பெண்ணாகவும், மக்கள் செல்வன் சுப்பிரமணியமாகவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை .