தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட நடிகர்களுக்கு வெள்ளிவிழா சினிமாக்களை கொடுத்தவர், பிரபல இயக்குநர் ஆர்.சுந்தரராஜன்.

அவரது மகன் தீபக் சுந்தரராஜன், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார்.

ஜெய்ப்பூர் அரண்மனையில் இதன் முதல் கட்ட ஷுட்டிங் நடந்து முடிந்துள்ளது.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகும் இந்த படத்தில் டாப்சி பன்னு கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், ஹர்ஷாத்தா விஜய் என்ற நடிகையும், இந்த படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இவர் மராத்தி படமான ‘விட்டல்’ என்ற படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

ஷுட்டிங் தளத்தில், விஜய் சேதுபதி மற்றும் டாப்சியுடன் நடித்த காட்சிகளை சமூக வலைத்தளத்தில் ஹர்ஷாத்தா பகிர்ந்து கொண்டுள்ளார்.

“தென் இந்திய மொழியில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை, அந்த கனவு இப்போது நிறைவேறியுள்ளது. முதல் தமிழ் படத்திலேயே இரு பெரிய நட்சத்திரங்களான விஜய்சேதுபதி மற்றும் டாப்சியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது. விஜய் வியூப்பூட்டும் ஒரு நடிகர். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் ரொம்ப நேரம் கழித்தேன்” என ஹர்ஷாத்தா, பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி