சென்னை: முத்தையாமுரளிதரன் பயோபிக் படத்தில் இருந்து விலகிய நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு, டிவிட்டரில்  பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட என திமுக எம்பி. கனிமொழி கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் பவுலர் முத்தையாமுரளிதரனின் பயோபிக் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இது சர்ச்சையான நிலையில், முத்தையா முரளிதரன் வேண்டுகோளை ஏற்று அவர் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில்,  ஈழத்தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்திய முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக நடிகர் விஜய்சேதுபதியை கண்டிக்கிறேன் என்று அவர் மகளுக்கு டுவிட்டர் மூலமாக ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். டஹிரித்திக் என்ற பெயரில் வெளியான அந்த டிவிட் பதிவு செர்ச்சையை ஏற்படுத்தியதுடன்,  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட் பதிவில்,  விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான், கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.