கொரோனாவால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர் விஜய் மட்டும் தனது மகன் சஞ்சய் குறித்து கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்தது .

விஜய் மகன் சஞ்சய் கனடா நாட்டில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ஃபிலிம் மேக்கிங் படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் அவர் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அந்நாட்டில் ஜுன் 1-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக விஜய் தரப்பில் “கனடாவில் சஞ்சய் இருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. ரொம்பவே பாதுகாப்பாக இருக்கிறார். விஜய்யும் அவ்வப்போது மகனிடம் பேசி வருகிறார். ஆகையால், விஜய் கவலை என்று வெளியாகியுள்ள செய்திகளில் எல்லாம் உண்மையில்லை” என்று குறிப்பிட்டனர்..