சென்னை:
தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பை நாளை விஜயகாந்த் வெளியிடுவார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக தேர்தல் பொருப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கூட்டணி விஷயத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா. சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும்; தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பை நாளை விஜய காந்த் வெளியிடுவார் என்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுக கூட்டணியில் ஏற்கெனவே 41 தொகுதிகளில் போட்டியிட்டோம் என்றும் அதை நாங்கள் தற்போதும் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.