மாயவரம்:

குரல் வளம் வேண்டி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சீர்காழி அருகே அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சமீபகாலமாக குரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பேச்சு பலருக்கும் புரியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இதனால் அவரது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவ ஏற்படுத்த தொடங்கியது. இந்நிலையில் நாகப்பட்டிணம் மாவட்டம் சீர்காழியில் பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாடு நடத்தினால் குரல் வளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதையடுத்து விஜயகாந்த் குடும்பத்தோடு இக்கோவிலில் வழிபாடு நடத்தினார். அவருக்கு தேன் பிரசாதம் கோவில் சார்பில் வழங்கப்பட்டது.