சென்னை:

மிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி நேற்று பதவி விலகியதை தொடர்ந்து புதிய அரசு தலைமை வழக்கறிஞராக  விஜயநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. உடல்நலத்தை காரணம் காட்டி, தமிழக தலைமை வழக்கறிஞர் முத்துகுமார சாமி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அரசுக்கு கடிதம் அனுப்பினர்.

அவரது கடிதம் ஏற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து, புதிய வழக்கறிஞராக விஜயநாராயணன் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..