நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் பல போராட்டங்களை கடந்து நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்நிலையில்,இலங்கையிலும் விஜய்யின் மெர்சல் ரீலிசானது. படத்துக்காக விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும் தியேட்டர்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையின் வல்வெட்டித்துறையில் உள்ள தியேட்டர் ஒன்றிலும் மெர்சல் படம் நேற்று ரீலிசானது. இந்த ஊர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊராகும். ஈழப்போரில் முக்கிய இடம் பிடித்த இந்த ஊரில் விஜய் ரசிகர்கள் மெர்சல் படத்துக்கு 15 அடி உயர பேனர் வைத்திருந்தனர். இது உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருந்தது.
வரலாற்று சிறப்புமிக்க வல்வெட்டித்துறையிலும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், குட்டிமணி ஆகியோர் இங்கு பிறந்த சிறப்புமிக்க இந்த ஊரில், ஒரு நடிகருக்கு பேனர் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சினிமா மோகம் ஈழத்திலும் பரவிவிட்டதோ என ஆதங்கம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் விஜய் பேனர் யாரோ மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டது. விஜயின் வேட்டி கிழிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.