விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்கு கொண்டுவர படக்குழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது.

திரையரங்குகளில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற சூழலை மாற்றி 100 சதவீத இருக்கைகளுக்கும் ரசிகர்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து வேண்டுகோள் வைத்தார்.

இந்நிலையில், ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டித்து முதல்வர் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணியாளர்கள் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், திரையரங்குகளில் அனுமதிக்கப்படும் இருக்கைகள் 50 சதவீதம் என்றே நீடிக்கிறது.

இந்த நிலையில், விஜய் விடுத்த கோரிக்கை ஏற்கப்படாததால் திரையுலகினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.