திரைத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வான 201 நபர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இத்துடன் 3 சவரன் எடையுள்ள பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பாடலாசிரியர் யுகபாரதி தாமதமாக வந்ததால் அப்போது அவருக்கு விருது வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார். அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.