மலையாளத்தில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்திருப் பவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் அஜீத் நடித்த தினா, விக்ரம் நடித்த ஐ போன்ற படங்களில் வில்லானாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் இவர் நடிக்கும் 250 படம் உருவாகிறது. குடுவக்குன்னெல் குரவச்சான் என்ற கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். அதற்கான ப்ரி புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

தொமிசன் முலகுப்படம் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை தயாரித்தவர். திலீப் நடித்த ராம்லீலா படத்தையும் இவர் தான் தயாரித்தார்.
சுரேஷ்கோபி நடிக்கும் 250வது படத்தை மேத்வ்ஸ் தாமஸ் பிலம்மூட்டி இயக்குகி றார். இதில் பிரபல நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடக்கவில்லை. ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.