விழுப்புரம்:
விழுப்புரம் அருகே செந்தில் என்ற இளைஞர்,  தானும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தன்னை காதலிக்க மறுத்த மாணவி நவீனா மீது பாய்ந்தார். இதனால் உடல் கருகி செந்தில் பலியானார். பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நவீனா நேற்று இரவு மரணமடைந்தார்.
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் வசித்தவர் செந்தில்,29. இவர் கடந்த ஆண்டு தனியார் மினி பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றிய போது, அந்தப் பேருந்தில் பள்ளி சென்று வந்த கொண்டங்கி பகுதியைச் சேர்ந்த  மாணவி நவீனாவை ஒருதலையாகக் காதலித்தார்.  தன்னை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்தார்.

நவீனா
நவீனா

இதையடுத்து அந்த மாணவி, செந்தில் மீது  விழுப்புரம் மேற்கு போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிந்த போலீஸார், செந்திலை கைது செய்தனர். பிறகு  அவர் ஜாமீனில் வெளியே வந்தார்
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 3-ம்தேதி, ஒரு கை மற்றும் கால் இழந்த நிலையில் செந்தில் தனது தாயாருடன், விழுப்புரம் எஸ்பியிடம் மனு  ஒன்றைஅளித்தார். அதில், ‘தான் காதலித்த பெண்ணின் பெற்றோர், எனது கை கால்களை வெட்டிவிட்டனர்” என்று புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து வெளியிட்ட அறிக் கையில், “மருத்துவமனை சேர்க்கை, ரயில்வே ட்ராக்மேன் குறிப்பு, ஜிப்மர் மருத்துவமனை சேர்க்கைக் குறிப்பேடு ஆகிய வற்றை பார்வையிட்டோம். அதில் செந்தில் கை, கால்களை இழந்தது விபத்து என்றே சொல்கின்றன. எங்கள் விசாரணையின் மூலம் செந்திலின் கை, கால் துண்டிப்பு ரயில் விபத்தால் ஏற்பட்டது” என்று தெரிவித்தது.  இதையடுத்து செந்தில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
செந்தில்
செந்தில்

இந்த நிலையில் செந்தில், தான் ஒருதலையாகக் காதலித்த நவீனா வீட்டுக்கு சென்றார்.  திடீரென தான் கொண்டு சென்ற பெட்ரோலை, தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதோடு மாணவி நவீனாவை இறுக்கி பிடித்துக்கொண்டார்.  இதை அப்பெண்ணின் தங்கை, தம்பி தடுக்க முயன்றனர். இதில் அனைவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி செந்தில் உயிரிழந்தார். தீயில் சிக்கிய, மாணவி நவீனா கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மருத் துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.  இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு நவீனா இறந்தார்.