லண்டன்:

ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக கோஷமிடாதீர்கள் என இந்திய கிரிக்கெட் ரசிகர்களை விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.


ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய போட்டியின் போது, எல்லைக் கோட்டருகே ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு எதிராக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

பேட்டிங் செய்து கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இதனை கவனித்து உடனடி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்.

ஸமித்துக்கு எதிராக கோஷமிடுவதை விட்டு, கரகோஷம் எழுப்புங்கள் என்று ட்விட் செய்திருந்தார்.
இதனையடுத்து விராட் கோலிக்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

விராட் கோலிக்கு ஸ்மித்தும் நன்றி தெரிவித்தார். விராட் கோலியின் பெருந்தன்மையை பார்த்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் வியந்து போயினர்.

பந்தை சேதப்படுத்தியதாக ஸ்மித்துக்கு விளையாட தடை விதிக்கப்பட்டிந்தது. இதனை சுட்டிக்காட்டி இந்திய ரசிகர்கள் கோஷம் எழுப்பினர்.