டில்லி

புதுமண தம்பதிகளான விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் பிரதமர் மோடியை இன்று சந்தித்தனர்.

கடந்த 11 ஆம் தேதி இத்தாலியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா சர்மவை கைப்பிடித்தார்.    அவர்களுடைய திர்மண வரவேற்பு நிகழ்ச்சி டிசம்பர் 21 மற்றும் டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

இன்று பிரதமர் மோடியை டில்லியில் விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் சந்தித்துள்ளனர்.   புதுமணத் தம்பதிகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.