பெங்களூரு

பில் 2018 போட்டியில் 24 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் 2018 போட்டியின் 24ஆம் லீக் ஆட்டம் நடைபெற்றது.   இதில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதின.   ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் போது பெங்களூரு அணி பந்து வீச மிகவும் அதிக நேரம் எடுத்துக் கொண்டது.   இதற்காக அந்த அணியின் தலைவர் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.