கொல்கத்தா:

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவுக்கு செம காட்டு காட்டிய பெங்களூர் அணி காப்டன், ஐபிஎல் போட்டிகளில் 5வது சதம் எடுத்து சாதனை புரிந்தார்.

நேற்றைய ஆட்டத்தின்போது தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய விராட் கோலி நிதானமாகவும், அதே நேரத்தில் கிடைந்து பந்துகளை பவுண்டரியாகவும் சிக்சராகவும் அடித்து, இந்த தொடரில், நேற்றுதான் கோலி  தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 56 பந்தில் 4 சிச்கர், 9 பவுண்டரியுடன் சதமடித்து 100 ரன்னில் வெளியேறினார்.

ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அடித்துள்ள ஐந்தாவது சதம் இதுவாகும். ஏற்கனவே பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்லுக்கு 6 சதம் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்ததாக 2வது இடத்தில் கோலியும், தொடர்ந்து,  ஷேன் வாட்சன், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 4 சதங்களுடன் பின்தொடர்கின்றனர்.