டில்லி:

விருதுநகர் எம்.பி மாணிக்தாகூர் மக்களவை காங்கிரஸ் கொறடாவாக நியமனம் செய்து பாராளுமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைமை கொறடா குடிகுன்னில் சுரேஷ் எம்.பி. உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற அறை எண் 25ல்  தினசரி காலை 10.15 மணி முதல் 10.30 மணி வரை கூட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவர் மற்றும் கொறடா பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் பாராளுமன்ற மக்களவைக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்தாகூர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், மாநிலங்களவை கொறடாவாக  அசாம் மாநில எம்.பி. தருண் கோகாய் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவை காங்கிரஸ் பாராளுமன்ற கட்சியின் தலைமை கொறடா குடிகுன்னில் தெரிவித்து உள்ளார்.