பிலிப்பைன்ஸ்

தென்கிழக்கு ஆசியாவில் கொரோனாவை விட 10 மடங்கு அதிக வலிமை பொருந்திய வைரஸ் தொற்று பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் பரவி வருகிறது. உலக அளவில் இதுவரை 2.18 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டு அதில் 7.73 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 1.45 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.  சுமார் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.  இதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் முயன்று வருகின்றன.

இந்நிலையில் கொரோனாவை விட 10 மடங்கு அதிக வலிமையான வைரஸ் தொற்று தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு டி614ஜி என பெயரிட்டுள்ளனர்.  இந்த வைரஸ் தொற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.   மேலும் மலேசியாவிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் இந்த வைரஸ் பிலிப்பன்ஸுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.  தற்போது மலேசியாவில் 45 பேருக்கு இந்த தொற்று உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு டி614ஜி வைரசைப் பரப்பியதாகத் தமிழகத்தை சேர்ந்த நிசார் முகமது என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த டி614ஜி  வைரஸ் பரவுவதிலும் கோரோனாவை விட 10 மடங்கு வேகமாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.  இந்த வைராஸால் பாதிக்கப்பட்டோர் பிறருக்கு அதிக வேகமாகவும் அதிக அளவிலும் பர்ப்புவாரக்ள் எனவும் கூறப்படுகிறது.   ஏற்கவே இந்த தொற்று எகிப்து மற்றும் பாகிஸ்தானில் உள்ளதாகக் கூறப்படுகிறது.