புதுடெல்லி: சர்வதேச விமானப் போக்குவரத்தை பழைய நிலைக்கு கொண்டுவரும் முயற்சியில், பெரும்பாலான விசாக்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது மத்திய அரசு.
கொரோனா பரவலை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெளிநாட்டு விசாக்களை அனுமதிக்க தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், ஐஓசி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவிற்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கின்போது நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து விசாக்களின் காலாவதியும், எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செல்லுபடியானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில், எலக்ட்ரானிக் விசா, சுற்றுலா விசா மற்றும் மருத்துவ விசாக்கள் மீதான தடை அப்படியே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.