செளந்தர்யாவுக்கும் விசாகனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததது. செளந்தர்யா – விசாகன் திருமணம் படு விமர்சியாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் ஹனீ மூன் சென்றது முதல் விசாகன், குழந்தை வேத் உடன் சந்தோஷமாக இருப்பது வரை அவ்வபோது அவர்களது சந்தோஷ தருணங்களை புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் செளந்தர்யா.

இந்த நிலையில், விசாகனை திருமணம் செய்துக் கொண்டது குறித்து செளந்தர்யா, முதல் முறையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

“விசாகனை முதலில் சந்தித்த போது அவருடன் ஒரு மணி நேரம் பேசினேன், அப்போதே எனக்கு தெரிந்துவிட்டது, அவர் எனக்கு பொருத்தமானவர் என்று. அதுமட்டும் இல்லாமல், நினைத்ததை நினைத்தபடி நேரடியாக பேசும் ரொம்ப நல்ல உள்ளம் கொண்டவராக இருக்கிறார். வெளிப்படையான மனிதராக இருந்ததால் தான், அவரை திருமணம் செய்ய முடிவு செய்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.