தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக பதவி ஏற்ற விஷால் பண மோசடி செய்த முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.   இதை எதிர்த்து ராதாரவி தலைமையில் நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.    நீதிமன்றத்தில் விஷால் வழக்கு முடியும் வரை முன்னாள் நிர்வாகிகல் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என உறுதி அளித்தார்.

ஆனால் விஷால் உறுதிமொழியை மீறி ராதா ரவி உட்பட சில முன்னாள் நிர்வாகிகளை நீக்கம் செய்தார்.   இதைத் தொடர்ந்து விஷால் மீது ராதா ரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 18ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுல்ளார்.