ஈரோடு அருகே பவானி ஆற்றில், இரண்டரை அடி உயரத்திலான விஷ்ணு சிலை அங்குள்ள மீனவர்களாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீரவாணி ஆற்றி மீன்பிடிப்பதற்காக, மீனவர்கள் சிலர் வலை வீசியுள்ளனர். அப்போது வலையில் ஏதோ எடை அதிகம் கொண்ட பொருள் சிக்கயதை உணர்ந்த மீனவர்கள், வலையில் சிக்கிய மீன்களை எடுப்பதற்காக வலையை இழுத்துள்ளனர். அப்போது அதில் விஷ்ணு சிலை ஒன்று சிக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்தியூர் வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட, அங்கு வந்த அதிகாரிகள், விஷ்ணு சிலை வெண்கலமா அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்டதா என ஆய்வுக்கு பின்னர் தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.